4

மதங்களில் பெண்களுடைய நிலையானது மிகவும் பின்தங்கியும் சரியான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது. பெண்களை கவுரவமாக நடத்துவதில் ஒன்றோடு ஒன்று முரண்பாடாகவே இருந்து வருகின்றன.

இந்து மதத்தில் பெண்களுடைய நிலை என்பது மிகவும் கவுரவமானது என்று கூறினாலும், பெண்களுக்கு எதிராகவே நடைமுறையில் இருந்து வருகின்றது. பெண்கள் இம்மதத்தில் வெவ்வேறு வகையில் சுரண்டப்பட்டும், அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்து மதக் கோட்பாடு அடிப்படையில் சில முரண்பாடுகளை அறிஞர்கள் முன் வைக்கின்றனர்.

பெண் விவாகரத்து செய்யும் உரிமையற்றவர்.

சொத்துரிமை அல்லது பூர்வீகச் சொத்துக்கள்மீது உரிமை கொண்டாட இயலாது.

கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மிகவும் குறைவு. ஒரே சாதியில்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஜாதகப் பொருத்தம் அனைத்தும் பொருந்தி இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்.

பெண் வீட்டார் வரதட்சணை மற்றும் பிற சடங்குகளை அதிகளவு செய்திட வேண்டும்.

குழந்தைத் திருமணம் அதிகளவு ஊக்கவிக்கப்படுகிறது.

மறுமணம் செய்வதே தவறு.

விதவைகள் சபிக்கப்பட்டவர்கள், அவளுடைய மகன், மகளுடைய திருமணத்தில் பங்கேற்பதும் தவறு.

இந்து மதத்தில் பெண்களைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தாலும், சொத்துரிமை, மறுமணம், குழந்தைத் திருமண தடை போன்றவை நடைமுறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. எனினும் சொத்துரிமை,மறுமணம் போன்றவை மறுக்கப்பட்ட ஒன்றாகவே இன்றளவும், பின்பற்றப்படுகிறது. குழந்தைத் திருமணம் இன்றும் பல்வேறு சூழல்களில் நடைமுறையில் இருந்துகொண்டே இருக்கிறது.

இஸ்லாம் :

இஸ்லாம் மதத்தில் பெண்களுடைய நிலைப்பாடு என்பது மிகவும் பின்தங்கிய நிலையென்றாலும், அதில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் பெண்களுக்கு ஆதரவாக இருந்துள்ளது. படிப்பறிவு, வேலை வாய்ப்பு, வறுமை போன்ற சமுதாயப் பாகுபாடுகள் இருந்தாலும் பெண்களுடைய நிலையை மிகவும் தெளிவாக வெளிக்காட்டுகிறது.

இஸ்லாம் பெண்கள், இஸ்ஸாம் ஆண்களைப்போல் சமமான உரிமைகளைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எந்த விதமான ஏற்றத்தாழ்வும் கிடையாது.

ஆண் விவாகரத்து செய்வதற்கு உரிமையுண்டு என்றாலும், பெண்ணுக்கு சரிசமமான விவாகரத்து உரிமையுண்டு.

சொத்துரிமையுண்டு, பூர்வீக, தார்மீக உரிமைகள் பெண்களுக்கு உண்டு. அவளுக்குத் தேவையான எந்த ஒரு தொழிலை வேண்டுமென்றாலும் தொடங்கலாம். பிற மதங்களில் இவையில்லை என்று கூறலாம்.

இஸ்லாம் பெண்கள் எந்த ஒரு ஆணையும் திருமணம் செய்து கொள்ள உரிமையுண்டு. பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையை பெண்ணுடைய ஒப்புதல் பெயரில்தான் முடிவு செய்திட வேண்டும்.

வரதட்சணை என்பது ஆண்கள், பெண்களுக்குக் கொடுக்க வேண்டியது என்று கூறுகிறது.

இஸ்லாம் விதவைகள் மறுமணத்திற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள், அவளுடைய மறுமணம் என்பது முஸ்லீம் சமூகத்தின் கடமையாகும். இதை நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் என்கின்றனர்.

கலப்புத் திருமணம் இஸ்ஸாம்களிடையே ஊக்குவிக்கப்படுகிறது. இன வேறுபாட்டை குறைக்க மிகவும் சிறந்தது என்று கூறுகின்றனர்.

ஒரு இஸ்லாம் தாய்க்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறது.

கிறிஸ்தவம் :

கிறிஸ்தவ மதம் உலகளவில் பின்பற்றப்பட்டாலும் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்ற ஒரு விவாதம் நீண்ட காலங்களாக இருந்து வந்துள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பல்வேறு சுதந்திரங்கள் அளிக்கப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் இவையாவும் பின்பற்றப்படுவதில்லை. பெண்களுடைய நிலை என்று கூறும்பொழுது பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

பெண்களுடைய நிலை என்பது மிகவும் தாழ்ந்ததாகவும், ஆணுக்கு நிகரானவர்கள் கிடையாது என்கிறது.

பிற மதங்களைப்போல் பெண்கள் தங்கள் வழிபாடுகளை தானாகவே செய்து கொள்ளலாம். ஆண், பெண் வழிபாடு என்ற பாகுபாடு கிடையாது.

பெண்கள் துறவிகளாகவும், கன்னியாஸ்திரியாகவும் மாறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு.

பெண்கள், கணவர்களை மதித்து நடந்திட வேண்டும். அவ்வாறு செய்யும் பெண்கள் மாண்போடும், மதிப்போடும் நடத்தப்படுவார்கள்.

பெண்களுடைய அழகு என்பது ஆடை, அணிகலன், கூந்தல் போன்றவற்றிலிருந்து பெறுவது கிடையாது. உள்ளத்திலிருந்து வரக்கூடிய அன்பு, அடக்கம், அச்சம் போன்றவற்றில் பெறப்படுகிறது.

பெண்கள் திருமணம் செய்யும்பொழுது தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். விதவை, மறுமணம், பாலியல் தொழிலாளிகளை திருமணம் செய்வது தவறு. தூய்மையானவர்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்கிறது.

பெண்கள் பெற்றோரை மதித்து நடந்திட வேண்டும், பெற்றோரை மதிக்காதவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்கிறது.

பெண்கள் ஆலயங்களில் அமைதியைக் கடைப்பிடித்திட வேண்டும். அதே போல் அங்கு எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, பேசவும் கூடாது.

பெண்கள் மாதவிடாய் நேரங்களில் யாரும் அவளை தொடக்கூடாது. அவள் பயன்படுத்தும் பொருட்களை தொட்டு விடக்கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது, உடனே குளிக்க வேண்டும், துணிகளை துவைத்திட வேண்டும், இல்லையென்றால் மாலைவரை அவர் தூய்மையற்றவராக இருப்பார்.

ஒரு பெண், ஆண் குழந்தையை ஈன்று எடுக்கும்பொழுது ஒரு வாரம் தூய்மையற்றவளாக இருப்பாள். ஆனால் பெண் குழந்தையை ஈன்று எடுத்தால் இரண்டு வாரங்கள் தூய்மையற்றவளாக இருப்பாள்.

ஆண்கள், பெண்களை ஆளப்பிறந்தவர்கள். பெண்கள் குழந்தை பிறப்பு வலியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக கடவுள் உருவாக்கியுள்ளார் என்கிறது.

பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. ஆனால் வீட்டில் ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு என்கிறது.

புத்தமதம் :

புத்தமதத்தில் பெண்களுடைய நிலை என்பது பிற மதங்களைவிட சற்று முன்னோக்கிதான் செல்கிறது என்று கூறலாம். பெண்களை மதிப்போடும், மாண்போடும் நடத்துகிறது. புத்த வழியில் அமைதியை நிலை நாட்டுவதே இதன் கோட்பாடுகளில் ஒன்று.

பெண்களை மாண்போடும், மதிப்போடும் நடத்திட வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடு.

பெண்களை ஆன்மிக வழியில் நடத்திச் செல்வதும், வாழ்வில் உயர்வான இடத்திற்கு இட்டு செல்ல வேண்டும். சமுதாய வடிவமைப்பைப் பற்றி எந்தவிதமான பாகுபாடும் இல்லை.

பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது மற்றும் துறவிகளாகவும், ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என்கிறது.

ஆணுக்குப் பெண் நிகரானவர்கள். இதுவே பெண் சமத்துவத்தைப் பற்றி பேசிய முதல் மதமாகும்.

பெண்கள் தங்களுடைய கணவருக்கு எந்த தீங்கும் நினைத்திடக் கூடாது.

பெண்கள் கொடூரமாகவோ அல்லது வன்முறையிலோ ஈடுபடக் கூடாது.

பெண்கள் முதியோரிடமும், பிறரிடத்திலும் அன்பாக இருந்திட வேண்டும்.

அனைவராலும் மதிக்கப்படுபவளாக, மரியாதைக்குரியவளாக சமூகத்தில் ஏற்றுக் கொள்ளும் வகையில் நடந்திட வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book